உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில், 19 மையங்களில் தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்

Published On 2023-10-16 09:43 GMT   |   Update On 2023-10-16 09:43 GMT
  • தமிழ் இலக்கிய திறன்றிவுத் தேர்வில் 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்.
  • தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிக ளுக்கு இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.1500 பெற உள்ளனர்.-

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதேப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து முதன்முதலாக கடந்த 2022-23ம் கல்வியாண்டில் அக்டோபர் 15ம் தேதி தமிழ் மொழி இலக்கியத் திறனறி வுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுதும் 2 லட்சத்து 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப் பட்டு வருகிற-து.

அதன்படி, இந்த ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50 சதவீதம், அரசு மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. என பொது பிரிவு என 50 சதவீத மாணவ, மாணவிக ளுக்கு தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்ச்சி பெறும் 1500 மாண வ, மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓசூர் கல்வி மாவட் டத்தில் 7 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட் டத்தில் 12 மையங்களிலும் என மொத்தம் 19 மையங்க ளில் இந்த தேர்வு நடத்தப் பட்டது. இதில் விண்ணப் பித்த 6 ஆயிரத்து 24 பேரில், 5,590 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 434 மாணவ, மாணவிகள் எழுத வில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவிக ளுக்கு இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.1500 பெற உள்ளனர்.

Tags:    

Similar News