உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில், ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-06 10:20 GMT   |   Update On 2023-01-06 10:20 GMT
  • தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செலிவியர்கள் உள்ளிட்ட வர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News