உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்துக் கொள்ளை

Published On 2023-03-22 10:03 GMT   |   Update On 2023-03-22 10:03 GMT
  • பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.10,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து துளசிராமன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சேலம் குகை புலிக்குத்தி 4-வது தெருவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையை சமியுல்லா மனைவி ஜமீனா (வயது 37) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற இவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.13,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வெறுங்கையுடன்

இதேபோல், இந்த கடைக்கு அருகில் இருந்த சக்திவேல் (31) என்பவருக்கு சொந்தமான பிரவுசிங் சென்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்காததால், கொள்ளையர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

வழக்கு பதிவு

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News