உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நீச்சல் கற்று கொள்ள பயிற்சி

Published On 2023-04-26 09:04 GMT   |   Update On 2023-04-26 09:04 GMT
  • முதல் கட்டமாக நேற்று முதல் 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.
  • மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

கிருஷ்ணகிரி 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டப்பிரிவு அலுவலகத்தின் வாயிலாக நீந்தக்கற்றுக்கொள்ளுதல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக நேற்று முதல், 7.5.2023-வரை பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக 9-ம் தேதி முதல் 21.5.2023-வரை , 3-ம் கட்டமாக 23- ம் தேதி முதல் முதல் 4.6.2023 வரை 12 நாட்களுக்கும் நடைபெற உள்ளது.

பயிற்சி நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நீச்சல் கற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிக்கட்டணமாக ரூ.1200 ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் வசூலிக்கப்படவுள்ளது.

மேலும் நீச்சல் தெரிந்த நபர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 பணம் வசூலிக்கப்படும்.

எனவே, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயிற்சிக்கட்டணத்திற்கான விண்ணப்பத்தினை நீச்சல் குளத்தில் பெற்று கட்டணத்தொகையினை செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளு ம்மாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு நீச்சல்குள பணியாளர் தொலைபேசி எண் 9894234638, 7810039008 அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலைபேசி எண் 7401703487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப ்படுகிறார்கள். 

Tags:    

Similar News