உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்-இளம்பெண் மாயம்

Published On 2022-09-08 15:20 IST   |   Update On 2022-09-08 15:20:00 IST
  • கடந்த 6-ந் தேதியில் இருந்து மாயமானார்.
  • கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிண்டங்கம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் திருப்பதி (வயது 20). இவர் கிட்டம்பட்டி பகுதியில் உள்ள கால்நடை பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ந் தேதியில் இருந்து மாயமானார்.

இதுகுறித்து திருப்பதியின் உறவினர் ஞானவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் சரிதா (வயது 15). இவர் கடந்த 9-ந் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராணி அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரிதாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News