உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு-1,052 பேர் எழுதினர்

Published On 2023-09-11 18:07 IST   |   Update On 2023-09-11 18:07:00 IST
  • கிருஷ்ணகிரியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1,052 பேர் எழுதினர்.
  • தேர்வு மையத்தில் கலெக்டர் சரயு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் நேற்று வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் நடந்தது.

இத்தேர்வினை எழுத மொத்தம் 1,226 பேர் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். நேற்று இத்தேர்வை ஆயிரத்து 52 பேர் எழுதினர். 174 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்வை கலெக்டர் சரயு தலைமையில் வருவாய்த்துறையினர், தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா, மாவட்ட முதன் மையக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர். இதையொட்டி மூன்று தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வர்களைத் தவிர மற்ற யாரும் தேர்வு மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News