உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கட்டிடத்தில் வேலை பார்த்த போது தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-09-15 15:29 IST   |   Update On 2022-09-15 15:29:00 IST
  • கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
  • சிகிச்சை பலனின்றி கொளஞ்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

திருவண்ணாமலை மாவட்டம், மூங்கில்துறைபட்டு பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள் (வயது55).

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓசூர் கும்பாரபேட்டை பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.

அப்போது கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொளஞ்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News