உள்ளூர் செய்திகள்

ஓசூரில்ெரயில் மோதி வாலிபர் மரணம்

Published On 2023-01-08 15:46 IST   |   Update On 2023-01-08 15:46:00 IST
  • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.
  • ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.

ஓசூர்,

ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரது மகன் மோகன் (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்,

இந்த நிலையில் நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.

உடனடியாக ெரயில்வே போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News