உள்ளூர் செய்திகள்

ஓசூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-07-06 15:52 IST   |   Update On 2022-07-06 15:52:00 IST
  • நாளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
  • ஓசூர் கோட்டத்தை சேர்ந்த டைட்டான் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஓசூர்,

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த டைட்டான் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே, நாளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், அரசனட்டி, பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சூர்யா நகர், சாந்தபுரம்,பிருந்தாவன் நகர், கிருஷ்ணா நகர் அண்ணாமலைநகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News