உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-11-07 15:31 IST   |   Update On 2022-11-07 15:31:00 IST
  • கணவன்-மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
  • திருச்சிபள்ளி என்ற இடத்தின் அருகில் வந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரஞ்சிதா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள குமுதேப்பள்ளி ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது25). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சிபள்ளி என்ற இடத்தின் அருகில் வந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரஞ்சிதா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News