தேன்கனிக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்
- வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவ லர் ராஜேஷ்குமார் தலை மையில், தாசில் தார் சரவணமூர்த்தி முன்னி லையில் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்துறை அலுவலர்க ளுக்கு வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவ லர் ராஜேஷ்குமார் தலை மையில், தாசில் தார் சரவணமூர்த்தி முன்னி லையில் நடைபெற்றது.
முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, பொது மருத்துவ சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
முகாமில் 250-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கோபி, சரவணகுமார், சசிகலா, சுப்பிரமணி, கண் மருத்துவ உதவியாளர் டேவிட், செல்வபாண்டியன், மேற்பார்வையாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் தேன்கனி க்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மனோ கரன், வனச்சரக அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதார மேற் பார்வை யாளர் சிவ குருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக்குமார், நவீன் ஆகியோர் ஏற்பாடு களை செய்தி ருந்தனர்.