உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு -நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2022-12-02 09:49 GMT   |   Update On 2022-12-02 09:49 GMT
  • கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
  • தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

தருமபுரி,

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்வானது தருமபுரி வட்டம், நகராட்சி பூங்கா அருகில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திலும், பாலக்கோடு வட்டம், ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், பென்னாகரம் வட்டம், நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி மையத்திலும், காரிமங்கலம் வட்டம், நாகனம்பட்டி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை கொண்டு அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய பக்கதிற்கு சென்றும் பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News