உள்ளூர் செய்திகள்

வாரிசுகளுக்கு காசோலையினை மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். 

கடலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலை கலெக்டர் வழங்கினார்

Published On 2022-07-12 07:40 GMT   |   Update On 2022-07-12 07:40 GMT
  • கடலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
  • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்; பட்டா தொடர்பான 269 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 52 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 16 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 48 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 76 மனுக்களும், இதர மனுக்கள் 55 ஆக மொத்தம் 516 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News