உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

Published On 2022-08-12 08:26 GMT   |   Update On 2022-08-12 08:26 GMT
  • தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார்.
  • அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கடலூர்:

புதுவை மாநிலம் உழவர்கரை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பலராமன். அவரது மனைவி கவிதா (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார். அப்போது தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அந்த டிராவல் பேக்கில் 10பவுன் நகை, பட்டுபுடவை ஆகியவை இருந்தது. திடீரென அந்த பெண் டிராவல் பேக்குடன் மாய மானார். அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News