உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமை வழக்கில் 12 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது

Published On 2023-08-08 05:53 GMT   |   Update On 2023-08-08 05:53 GMT
  • பாலமுரளி கிருஷ்ணா மீது போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.
  • பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டி. இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு விஜயவாடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருந்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து வந்த பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

Similar News