உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில், மாணவர்களை குப்பைகளை அகற்ற ஈடுபடுத்தியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
- படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில், குப்பைகளை அகற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் வகுப்பு நேரங்களில் அங்கு படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வகுப்பு நேரங்களில், எந்த காரணத்தைக் கொண்டும் பிற பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது விதிமுறை.
அவற்றையும் மீறி சில பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.