உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் போலீசார் சார்பில் நடந்த முகாமில் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Published On 2023-07-06 08:41 GMT   |   Update On 2023-07-06 08:41 GMT
  • முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  • ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News