உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வேடசந்தூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை

Published On 2023-07-23 07:21 GMT   |   Update On 2023-07-23 07:21 GMT
  • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
  • மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது30). சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

வேடசந்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News