உள்ளூர் செய்திகள்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது.

Published On 2023-05-23 08:29 GMT   |   Update On 2023-05-23 08:29 GMT
  • முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.
  • பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பேடரபள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி கமலா (23). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த கமலாவின் இடது கையை வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த கமலா மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை தங்கை மஞ்சுளா மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மஞ்சுளா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்

Tags:    

Similar News