உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவியை தாக்கிய கணவர் கைது

Published On 2022-08-08 09:39 GMT   |   Update On 2022-08-08 09:39 GMT
  • கணவர் எனது நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.
  • மனைவியை தாக்கிய கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 19). இவர் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் கட்டிட வேலை செய்து வரும் கவுதம் (26) என்பவருக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் எனது கணவர் நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கவுதம் எங்களது 11 மாத குழந்தையை பார்த்து இது எனக்கு பிறந்தது தானா என கூறி தகராறு செய்தார். இதனால் எங்கள் 2 பேரும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் மரக்கட்டையால் என்னை தாக்கினார். தாக்குதலில் படுகாயம் அடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் மனைவியை தாக்கிய கவுதம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

புலியகுளம் அருகே உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 38). இவரது மனைவி மீனா (28). மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மனோகரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தது.

இது குறித்து 2 முறை கணவர் மீது மீனா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி ஆகியோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் மீண்டும் தனது மனைவியை தாக்கினார். இது குறித்து மீனா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனோகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

Tags:    

Similar News