உள்ளூர் செய்திகள்

சேரம்பாடியில் மண்சரிந்து ஓட்டல் சேதம்

Published On 2022-07-18 10:31 GMT   |   Update On 2022-07-18 10:31 GMT
  • பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
  • தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஊட்டி:

கூடலூரில் இருந்து பாடந்தொரை வழியாக தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது பாடந்தொரை அரசு பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் ஊட்டியில் இருந்து காய்கறி, பழக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு பந்தலூர் தாலுகா குந்தலாடிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News