உள்ளூர் செய்திகள்
ஓசூர் 22-வது வார்டு பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள்
- ரூ.34 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முனீஸ்வர் நகர், நாதன் நகர், சீனிவாசா கார்டன் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சி ஆணை யாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் வெங்கடேஷ் , மாநகராட்சி நிலைக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.