வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில்,காவல்துறையினரிடம் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் காட்சி.
ஓசூர் வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி
- ஒப்படைக்குமாறு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கேட்டுக் கொண்டார்.
- ஒலி பெருக்கி மூலம் மற்றும் பேர்கள் பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளையும் கள்ள நாட்டு துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அதனை தாமாக முன்வந்து வனத்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கி யஸ்தர்களிடமோ ஒப்படைக்குமாறு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், ஓசூர் தேன்கனிகோட்டை, அஞ்செட்டி ,உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி போன்ற 7 வனச்சரகங்களிலும் உள்ள அனைத்து வன அலுவலர்களும், யானைகள், இதர உயிரினங்கள் மற்றும் வனத்தின் முக்கியத்துவம், மற்றும் பாதுகாப்பதை அவசியம் குறித்தும் மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், திண்ணை பிரச்சாரம், ஒலி பெருக்கி மூலம் மற்றும் பேர்கள் பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் விளைவாக, வனப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் மற்றும் ஆங்காங்கே புதரில் மறைத்து வைத்து சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும், 111 கள்ள நாட்டு கைப்பற்றப்பட்டன. இந்த 111 துப்பாக்கிகளையும், நேற்று மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் யாரேனும் கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்து வனத்துறையில் கண்டு பிடிக்கப்பட்டால் அல்லது பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய் படைகள் மூலம் சோதனை செய்து கண்டிப்ப ட்டாலோ வழக்கு கள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரி க்கப்பட்டது.