உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

இல்லம்தேடி கல்வி : ஊழியரை விமர்சித்த பள்ளி ஆசிரியருக்கு கண்டிப்பு

Published On 2023-08-09 07:33 GMT   |   Update On 2023-08-09 07:33 GMT
  • இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆசிரியையை முன்விரோதம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார்.
  • கல்வி அதிகாரிகள் நேரடியாக விமர்சித்த ஆசிரியரை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகில் உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த இல்லம்தேடி கல்வி தன்னார்வலரான ஆர்த்தி என்பவரை பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கோபி நாதன் என்பவர் முன்விரோ தம் காரணமாக ஒருமையில் பேசி தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார். இதுகுறித்து ஆர்த்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.

இதனைதொடர்ந்து ஆர்த்தியின் உறவினர்களும் கோபிநாதனுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனைதொடர்ந்து கல்வி அதிகாரிகள் நேரடியாக கோபிநாதனை கண்டித்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.

Tags:    

Similar News