- காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக்காலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தன. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் திடீரென மாலையில் குளிர்ந்த காற்றுடன் கருமேகமூட்டம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, கீழம்பி, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்தத் திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.