கிருஷ்ணகிரியில் பயங்கர இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை
- நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
- பிற பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
கிருஷ்ணகிரி
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதேபோல ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விபரம் வருமாறு:-
தேன்கனிக்கோட்டை-42 மி.மீ.,ஓசூர்-57 மி.மீ.,கிருஷ்ணகிரி-49.5 மி.மீ.,அஞ்செட்டி-5 மி.மீ.,தளி - 50 மி.மீ.,சூளகிரி- 7 மி.மீ.,நெடுங்கால் -40.2 மி.மீ.,ராயக்கோட்டை -10 மி.மீ.,போச்சம்பள்ளி -7 மி.மீ.
கிருஷ்ணகிரி 05.09.22 கே.ஆர்.பி.அணை நிலவரம்:- முழு கொள்ளளவு : 52 அடி,
நீர் இருப்பு : 49.95,நீர் வரத்து : வினாடிக்கு 3539 கன அடி,நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 3039 கன அடி.
கிருஷ்ணகிரி மாவட்டம் 05.09.22 ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிலவரம்:-முழு கொள்ளளவு : 44.28 அடி,நீர் இருப்பு : 40.02 அடி,நீர் வரத்து : வினாடிக்கு 2020 கன அடி, நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 2020 கன அடி.