உள்ளூர் செய்திகள்

அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. உற்சாகமாக பள்ளிக்கு பறப்பட்டு சென்ற மாணவிகள். இடம் : தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறப்பு

Published On 2023-01-02 09:53 GMT   |   Update On 2023-01-02 09:53 GMT
  • 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
  • விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

தருமபுரி,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் -2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது.

தேர்வுகள் முடிந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.

Tags:    

Similar News