உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மளிகை கடைக்காரர் பலி

Published On 2023-11-03 15:18 IST   |   Update On 2023-11-03 15:18:00 IST
  • காரிமங்கலம் அருகே மளிகை கடைக்காரர் மோட்டர் சைக்கிள் மோதி பலியனார்.
  • மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மூலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது61) இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் வீட்டு அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கம்பைநல்லூர் வந்து கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது் கம்பைநல்லூர்-கெலவள்ளி ரோட்டில் சென்று சென்று கொண்டிந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் ஒட்டி வந்த வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து துரைசாமி மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News