உள்ளூர் செய்திகள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல் ஆகும்.
- மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் நாளை ( செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே தஞ்சை மாவ ட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.