உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

மே-1 ந்தேதி 241 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2023-04-26 14:59 IST   |   Update On 2023-04-26 14:59:00 IST
  • திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல்.
  • திரவ கழிவு மேலாண்மை நடடிக்கைகள் குறித்து விவாதித்தல்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ெவளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.5.23 தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் 241 கிராம் ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.

இக்கிராமசபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், 2022-23, 2023-24 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விதியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-23-ஆம் ஆண்டு திட்டம் ii -ன் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற விவரம் குறித்து விவாதித்தல்,2023-24 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- ii கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட புதுப்பிக்கப்பட்ட நூலகங்களில் "வாசகர்கள் குழு" உருவாக்குவது குறித்தும் அதன் பயன்களையும் தெரிவித்தல், மகாத்மா காத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை மற்றும் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்யப்பட்டதற்கான பணிகள் குறித்து விதித்தல், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தவற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவக் கழிவு மேலாண்மை நடடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஜல் ஜீனை இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள் குறித்து விவாதித்தல், வறுமை குறைப்பு திட்டம் ஆகியனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இக்கிரா மசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News