உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவ, மாணவியர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-05-26 10:00 GMT   |   Update On 2023-05-26 10:00 GMT
  • பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள நடைபெற்றது.
  • கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.மேலும் 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News