உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று அலைமோதிய மக்கள் கூட்டம்.

ஆடிமாதம் கொடை விழாவை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்

Published On 2022-07-19 09:31 GMT   |   Update On 2022-07-19 09:31 GMT
  • மேலப்பாளையம் கால்நடைசந்தை பிரசித்தி பெற்றது. இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டஙளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

நெல்லை:

மேலப்பாளையம் கால்நடைசந்தை பிரசித்தி பெற்றது. இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டஙளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள். வழக்கமாக வாரந் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி சுமார் ரூ. 4 கோடி அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. தென்மாவட்டங்களில் ஆடிமாதம் பல்வேறு அம்மன் கோவில்கள், சாஸ்தா கோவில்களில் கொடைவிழா நடைபெறுவது வழக்கம்.

அப்போது பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

தற்போது ஆடிமாதம் பிறப்பையொட்டி இன்று மேலப்பாளம் சந்தையில் ஏராளமானவர்கள் திரண்டனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். அவற்றை வாங்க சிறுவியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டனர். இதனால் மேலப்பாளையம் கால்நடை சந்தை களைகட்டி காணப்பட்டது.

Tags:    

Similar News