உள்ளூர் செய்திகள்
மாரண்டஅள்ளி அருகே சிறுமி மாயம்
- கடந்த 9-ம் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த பஞ்சப்பள்ளி அருகேயுள்ள கங்கபாளையத்தைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 9-ம் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் அவரது தாயார் பஞ்சப்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.