உள்ளூர் செய்திகள்

எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி.

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை

Published On 2023-02-23 10:00 GMT   |   Update On 2023-02-23 10:00 GMT
  • வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
  • பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பாபநாசம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.

வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News