உள்ளூர் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை

Published On 2022-10-20 14:59 IST   |   Update On 2022-10-20 15:40:00 IST
  • அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தீபாவளி பரிசளிப்பு விழா நடந்தது.
  • ஏழை, எளிய மக்கள் என மொத்தம் 50 பேருக்கு சேலை மற்றும் இனிப்பு, 10 மளிகை பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கினார்.

ஊட்டி,

மக்களுக்காக அறக்கட்டளை மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தீபாவளி பரிசளிப்பு விழா நடந்தது. ஜாம்பவான் ஜெரால்ட், உலிக்கல் சண்முகம், சரவணன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல் கவ்வட்டி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் என மொத்தம் 50 பேருக்கு சேலை மற்றும் இனிப்பு, 10 மளிகை பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கினார்.

அப்போது பேசிய அவர் அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மக்களுக்காக அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உலிகல் சண்முகம் நன்றி கூறினார். லவ்டேல் தினேஷ் நவாஸ், சித்தராஜ், நவீன்,சந்தீப், ஹக்கீம், விஷால் மூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

Tags:    

Similar News