உள்ளூர் செய்திகள்

முகாமை ஊராட்சி தலைவர் சோழன் தொடங்கினார்.

இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2023-09-25 15:38 IST   |   Update On 2023-09-25 15:38:00 IST
  • இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
  • பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

மெலட்டூர்:

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தஞ்சை அவர் லேடி ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

முகாமில் புனித சந்தன மாதா ஆலய பங்குதந்தை விக்டர்தாஸ் முன்னிலை வகித்தார்.

இதில் ராராமுத்திர கோட்டை ஊராட்சி தலைவர் சோழன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய மாதா ஆஸ்பத்திரி ஷோபா, வின்மலர் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News