உள்ளூர் செய்திகள்

திருமலாபுரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2023-10-15 09:00 GMT   |   Update On 2023-10-15 09:00 GMT
  • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
  • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மனோஜ்குமார், சின்னத்துரை, செந்தூர் பாண்டியன், வல்லரசு, யேசுதாஸ், மகேந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News