உள்ளூர் செய்திகள்

மாரண்ட அள்ளி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2023-08-10 10:42 GMT   |   Update On 2023-08-10 10:42 GMT
  • 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்
  • உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம், கவுன்சிலர்கள் கீதா வடிவேல், கார்த்திகேயன், வேலு, வெங்கடேசன், அபிராமி காந்தி மற்றும் சௌந்தர வைத்திஸ், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் தேவராஜ், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் மகேஷ், ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News