உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய போது எடுத்த படம்.

பொ.துறிஞ்சிப்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2023-08-03 09:41 GMT   |   Update On 2023-08-03 09:41 GMT
  • 155 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி கள் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் நடை பெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குண சேகரன் சுமார் 155 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினரும், தி.மு.க ஒன்றிய கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் தாரணி ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான பாபு (எ)முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரியா பானு நியாமத் மற்றும் ஒன்றிய தி.மு.க கழக துணை செயலாளர்கள் ஜகிதா செரீப், வே.செல்வன், ராஜேந்திரன், மாவட்ட கழக பிரநிதிகள் பன்னீர்ச்செல்வம், இரவி, இராமன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ஜான்அக்பர், ஆபிஸ், சதாசுர ்ஜித், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபானி, கிளைக்கழக செயலாளர்கள் ராமலிங்கம், சேட்டு, சின்னப்பன், அக்பர், ரத்தினம், முருகன், அப்பாவு, ரத்தினம், முருகன், ஊள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News