உள்ளூர் செய்திகள்

பழங்குடி இன மக்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்

Published On 2023-04-17 14:50 IST   |   Update On 2023-04-17 14:50:00 IST
  • பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
  • திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில்நடைபெறுகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்ட அளவில் உள்ள பழங்குடி யின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவார ணங்கள், நலத்திட்டங்கள் மற்றும் சான்றுகள் வழங்கு தல் மற்றும் அவர்களுக்கு தேவையான பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News