உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய செயலி மூலம் நாளை முதல் விடுப்பு எடுக்க வசதி
- அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது.
- 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் கோட்ட போக்குவரத்து தலைமை அலுவலக அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது. இவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர். தலைமை அலுவலக மத்திய பணிமனை தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், மேற்பார்வையாளர், பிரிவு அலுவலர்கள் இம்முறையில் நாளை முதல் (1-ந்தேதி) விடுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம், படிப்படியாக மற்ற பணிமனைக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.