உள்ளூர் செய்திகள்

மீன்துறை ஆய்வாளர் பதவிக்கானஹால்டிக்கெட் வெளியீடு

Published On 2023-02-01 09:25 GMT   |   Update On 2023-02-01 09:25 GMT
  • தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
  • தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், பி.எப்.சி., எம்.எஸ்.சி. விலங்கியல், மற்றும் அது சம்பந்தமாக படித்த இளநிலை , முதுநிலை பட்டதாரிகள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சேலம்

இந்த நிலையில் மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 8-ந்தேதி காலை மற்றும் மதியம் என 2 ஷிப்டுகளாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜயயாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News