உள்ளூர் செய்திகள்

கூடலூர் காசிம்வயலில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

Published On 2023-04-15 09:46 GMT   |   Update On 2023-04-15 09:46 GMT
காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.

ஊட்டி,

கூடலூர் நகராட்சி உட்பட்ட காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கூடலூர் நகராட்சி மூலமாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.இதற்கு இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர். காசிம்வயல் பகுதி மக்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கும், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையாளர் ப்ரான்ஷிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News