உள்ளூர் செய்திகள்

புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

காா்த்திகை மாத முதல் சோமவாரம்; தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2023-11-21 10:24 GMT   |   Update On 2023-11-21 10:24 GMT
  • 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • 4, 11-ந் தேதிகளில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.

இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரமான நேற்று மாலை பெருவுடையாா் சன்னதி முன் 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, 1008 சங்குகளில் நிரப்பப்ப ட்ட புனித நீரால் பெருவு டையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, பெரிய கோயிலில் வரும் 27-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11 ஆம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News