உள்ளூர் செய்திகள்

குத்துக்கல்வலசை ஊராட்சியில் உயிரிழந்த ஆபரேட்டர் குடும்பத்திற்கு நிதி உதவி

Published On 2023-11-01 08:42 GMT   |   Update On 2023-11-01 08:42 GMT
  • கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
  • ஊராட்சி தலைவர் சத்யராஜ் கருப்பசாமி குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை ஊராட்சியில் சுமார் 30 வருடங் களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒய்வு பெற்ற கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு தனது சொந்த நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை நேரில் வழங்கினார். அப்போது உடன் துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

Tags:    

Similar News