உள்ளூர் செய்திகள்
- இருவரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- கடந்த 9-ம் தேதி இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ், பாசப்பாவை தாக்கி மிரட்டி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள எனுசோனை பகுதியை சேர்ந்தவர் பாசப்பா (வயது52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (53). இருவரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ், பாசப்பாவை தாக்கி மிரட்டி உள்ளார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.