உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே விவசாயி மர்மசாவு

Published On 2023-03-29 08:59 GMT   |   Update On 2023-03-29 08:59 GMT
  • தோட்டத்திற்கு சென்ற ராஜ் இரவு வெகு நேரம் ஆகியும் வரவில்லை.
  • புதுதோட்டத்தில் மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை புதூரை சேர்ந்தவர் ராஜ். விவசாயி. இவருக்கு திருணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு சொந்தமாக குஞ்சப்பனை அடுத்த புதுதோட்டத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜ் நேற்று மாலை தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு, சென்றார். ஆனால் இரவு வெகு நேரத்தை தாண்டியும் அவர் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இன்று அதிகாலை அவரது உறவினர்கள் அனைவரும், புதுதோட்டத்தில் உள்ள தோட்டத்திற்கு தேடி சென்றனர்.அப்போது, அங்கு மர்மமான முறையில் ராஜ் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர்.அப்போது தலையில் கல்லால் குத்தி கொல்லப்பட்டதற்கான தடயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News