உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை?

Published On 2023-01-20 15:33 IST   |   Update On 2023-01-20 15:33:00 IST
  • வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
  • யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தளப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று முனதினம் வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்றார்.

மாலை அவரது நிலம் வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அந்த நேரம் அங்கு வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்து பகுதியில் தோல்கள் உரிந்த நிலையில் இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவரது மகன் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வெங்கடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் வெங்கடசாமியை யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News