உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அருகே வேன் மோதி விவசாயி பலி: 2 பேர் படுகாயம்

Published On 2023-04-28 12:32 IST   |   Update On 2023-04-28 12:32:00 IST
  • தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
  • பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது.

விழுப்புரம்:

ராணிப்பேட்டை மாவட்டம் லப்பை பேட்டையைச் சேர்ந்தவர் கணபதி (55) விவசாயி. இவர் விழுப்புரம் மாவ ட்டம் மேல்மலையனூர் அருகே பெரிய நொளம்பை கிராமத்தில் உள்ள தன் மருமகன் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

சஞ்சீவிராயன்பேட்டை அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ள்ளார். இதனால் பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கணபதி, சேத்துப் பட்டைச் சேர்ந்த மார்ட்டீன், நத்தமேட்டைச் சேர்ந்த சண்முகம் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணபதி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரி ன்பேரில் அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News