உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி சாவு

Published On 2023-04-19 10:05 GMT   |   Update On 2023-04-19 10:05 GMT
  • தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயியான இவர் கடந்த மாதம் 31-ந் தேதி தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News